பொட்டு வைப்பதும்
பூ வைப்பதும்
சிலுவை அணிவதும்
தொப்பி போடுவதும்
பட்டை அடிப்பதும்
நகையணிவதும்
கண்ணாடி போடுவதும்
சாயம் பூசுவதும்
ஒப்பனை செய்வதும்-
Extra curriculum activities!
ஆடை அணிவது
மட்டுமே -
Main Subject!
ஏனெனில் இது
மானத்தை காத்து
மரியாதையை கூட்டும்...
விலங்கிலிருந்து நம்மை
வேறுபடுத்திக் காட்டுவது
சிரிப்பு,
ஆடை,
பகுத்தறிவு!
ஒரு மனிதனை சிரிக்காதே, சிந்திக்காதே என்று எப்படி கூற முடியாதோ. அது போல கண்ணியமான ஆடை அணியாதே என்று யாரும் கூற முடியாது!
கூறவும் கூடாது.
கிழித்து விட்டு அலைவதுதான் சுதந்திரம் என்றால்
Border -ல் கூட
தேர்ச்சிப் பெற முடியாது!
மற்றவர்கள் முகம் சுளிக்காமல்
வண்டுகள் சுற்றிவராமல்
இருக்க கண்ணியமான
ஆடை சமுதாயத்தில்
பெரும்பங்காற்றுகிறது...
#ஹிஜாப் அணிவதால்
பெண் பாதுகாப்பாக
உணர்கிறாள்...
இது அவளில் அடையாளம்
இது அவாலுக்கு புரியாது!
✍ஆவுடை யூனுஸ்
#hijab





0 comments:
Post a Comment