சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Saturday, 19 February 2022

இது பாட்டி வடைச்சுட்ட கதையல்ல

 யாப்பா நீ ஓட்டு போட கிளம்பலயா?

இல்லை பாட்டி.! 


ஊரு ஊராய் ஓட்டுக் கேட்டா. இப்போ ஓட்டு மட்டும் போடலங்கற. 


நீ செய்றது சரியாப்பா? யாரும் காசு தரலையா. 


இல்லை பாட்டி இது வேற 


இப்போ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு மட்டும் தான் உள்ளாட்சி தேர்தல் நடக்குது. 


ஊராட்சிக்கு 2019 ல் அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே நடந்து விட்டது. எங்க ஊரு ஆவுடையார் பட்டிணம் ஊராட்சியின் கீழ் வருது அதனாலே இப்போ அங்கே தேர்தல் இல்ல பாட்டி. 


எனக்கு ஒன்னும் புரியலப்பா. இருந்தாலும் ஒன்னு செல்லுரே

இந்த பாட்டி சொன்னா கேட்பியா? 


பாட்டி சொல்லை தப்பமாட்டே

சொல்லுங்க பாட்டிம்மா. 


பச்சை பொய் பழனிசாமியையும், ஆட்டுக்குட்டி அண்ணாமலையும் கிட்டே நெருங்க விடாதே.

மனச மாத்தி நாட்டை கெடுத்து புடுவாங்க. 


பார்த்து சமத்தா இருந்துக்கோ பேரா... 


பாட்டி ஒரு நிமிசம்.! 


என சொல்லி முடிப்பதற்குள்

தலையை திருப்பி என் புன்னகையை பார்த்து புரிந்துக் கொண்டது அப்பாட்டி!


சரிப்பா நான் ஓட்டு போட்டுட்டே.

கிளம்புறேன்...


செத்த இத சரி பண்ணிக் கொடுப்பா என மூக்கு கண்ணாடியை நீட்டியது.


பாட்டி இத மாத்திடுவோம். ரொம்ப பழசா இருக்கு.


அடியாத்தி! 

இது அவுங்க வாங்கி கொடுத்தது. இப்போ அவுங்க இல்லை இது மட்டும்தான் இருக்கு அவரு ஜாபகமாக...


உடனே நிலைமையை புரிந்துக் கொண்டு அந்த கண்ணாடியை "கம்லீட் சர்வீஸ்" செய்து கொடுத்தவுடன்...


எவ்வளவுப்பா பேரா? என்றாள் பாட்டி


கலைஞரு "கண் ஒளி திட்டத்தை" இலவசமாக கொண்டு வந்தாரு. அட்லீஸ்ட் நான் இத கூட

இலவசமாக செய்தா குறைந்தா போய்விடுவேன். அதனால நம்ம கடையில் சர்விஸ், ஐ டெஸ்ட் பிரீதான் பாட்டி...


நீ நல்லா இரு... இந்த பாட்டியோட ஆசிர்வாதம் என்றும் உனக்கு உண்டு...

என சொல்லிவிட்டு

நடந்தே சென்றது 90 வயது மதிக்கத்தக்க அந்த பாட்டிம்மா!


-ஆவுடை யூனுஸ்

0 comments:

Post a Comment