சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Thursday, 5 March 2020

நம்பிக்கை விதைத்தால்

பொய்கள் திரியும்
உண்மைகள் உறங்கும்
மௌனம் தொடர்ந்தால்...

சதிகள் காத்திருக்கும்
துரோகம் துணைபோகும்
சாதுரியம் இல்லையென்றால்...


பிரிவினை துரத்தும்
நட்பு விலகும்
ஒற்றுமை தூங்கினால்...



















உள்ளம் கொதிக்கும்
உலகம் வியக்கும்
உரிமை பறித்தால்...

நாடு நாசமாகும்
கேடு பரவும்
கொடுங்கோலாட்சி தொடர்ந்தால்...

கனவு வெல்லும்
கற்பனை சொல்லும்
கடமை கண்ணியமானால்...

வெற்றி புகழ்பாடும்
வீரம் விளையும்
நம்பிக்கை விதைத்தால்...

ஆவுடை யூனுஸ்

0 comments:

Post a Comment