பாங்கு சொல்லும் நேரமிது
நோன்பு நோர்க்கும் மாதமிது.
தொழுகை செல்லும் வழியிது
தோழமை கூடும் இடமிது.
வேண்டல் குவியும் வேளையிது
சீண்டல் குறையும் சினேகமிது.
நன்மை தேடும் காலமிது
பண்பை வளர்க்கும் மார்க்கமிது.
ஈகை வழங்கும் ஏற்றமிது
ஏக இறைவன் கட்டளையிது.
- #ஆவுடையூனுஸ்
0 comments:
Post a Comment