சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Monday, 24 March 2025

ரமலான் மாதக் கவிதை

பாங்கு சொல்லும் நேரமிது

நோன்பு நோர்க்கும் மாதமிது.


தொழுகை செல்லும் வழியிது

தோழமை கூடும் இடமிது.



வேண்டல் குவியும் வேளையிது

சீண்டல் குறையும் சினேகமிது.


நன்மை தேடும் காலமிது

பண்பை வளர்க்கும் மார்க்கமிது.


ஈகை வழங்கும் ஏற்றமிது

ஏக இறைவன் கட்டளையிது.


- #ஆவுடையூனுஸ்

0 comments:

Post a Comment