சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Thursday, 12 September 2019

எனக்குள் நீதான்


எனக்குள் நீதான்

சொற்களெல்லாம்
பூக்களாக
மாறுகின்றன
உன் பெயரை
வாசிக்கும்போது!

பூக்களெல்லாம்
போட்டிப் போட்டு
உதிர்கின்றன
உன் கூந்தலில்
வசிக்க வேண்டுமென்று!

பாதைகளெல்லாம்
கம்பளம் விரித்து
செவ்வானம்
உன் கைகளில்
மலர்கொத்துக் கொடுக்கிறது!














நீ பேசிய
தமிழ் அழகில்
சொற்களெல்லாம்
வானத்தில்
நட்சத்திரமாக
மின்னுகிறது!

நீ பூசிய
மஞ்சள் அழகில்
சூரியன்
வெட்கப்படுகிறது,
சந்திராயன்
2 கிலோ மீட்டர்


ஆவுடை யூனுஸ்




0 comments:

Post a Comment